தமிழகத்தில் மார்ச் 2ம் தேதி உள்ளுர் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறும் பண்டிகைகள், சிறப்பு வாய்ந்த திருத்தல திருவிழாக்கள் போன்றவைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஏனெனில் விழாக்களில் கலந்து கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அவர்களுக்கு ஏதுவாக அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் தற்போது கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கிவரும் கோனியம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
MELUM கோனியம்மன் கோயிலில் மாசி தேர் திருவிழா தேரோட்ட விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தேரோட்ட விழாவின் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூச்சாட்டு விழா போன்றவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 23ம் முதல் 28 வரை தினமும் ஒரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் மார்ச் 2ம் தேதி மதியம் 2.05 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.
சனிக்கிழமை காலை 9 மணிவரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – காவல்துறை உத்தரவு!
இந்த தேரோட்ட நிகழ்ச்சியின்போது, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியில் வெளிமாவட்ட மக்கள் பங்கேற்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.