தமிழக அரசு சார்பில் நாளை (பிப்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப். 25) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 வருடமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதனால் அதிகமான வேலைவாய்ப்பு இன்மை நிலவி வந்தது. இதனை தொடர்ந்து எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடைபெறவில்லை, இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கும் ஏமாற்றம் தான் கிடைத்தது. தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மை தவிர்க்கும் விதமாக அரசு மற்றும் தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பள உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: நாளை( பிப்.25) காலை 10.30 மணி
பதிவுதாரர்கள் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.