ஜூன் 25ம் தேதி அன்று பொது விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!
தற்போது போபாலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் ஜூன் 25ம் தேதியன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை
குஜராத் மாநிலம் போபால் மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 25ம் தேதியன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881ன் விதிகளின் கீழ் பொது விடுமுறையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘ஜூன் 25ம் தேதி அன்று போபால் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881 இன் விதிகளின் கீழ் இந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது பஞ்சாயத்து தேர்தலில் தொழிலாளர்கள் வாக்களிக்க எதுவாக அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும் தேர்தல் வாக்குப்பதிவு அன்று அடைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இப்போது தொழிலாளர்களின் வாராந்திர விடுமுறைக்கு பதிலாக ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்க தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக 2 மணி நேரம் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் முதல் ஷிப்ட் வழக்கமான அட்டவணைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக முடிவடையும் என்றும் இரண்டாவது ஷிப்ட் வழக்கமான அட்டவணைக்கு 2 மணிநேரம் தாமதமாகத் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.