தமிழகத்தில் டிச.12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் வரும் டிசம்பர் 12 தேதியான ஞாயிறன்று திருவாரூர் மாவட்டத்தில் தாவூத் காம் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழா காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்கும். அப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை விடுமுறை அளிக்கப்படும்.
இதற்காக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும். தற்போது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் முத்துபேட்டையில் உள்ள தாவூத் காம் தர்கா மிகவும் பிரபலமான தர்காவாக உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தர்காவில் ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த கந்தூரி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். இதனால் மதச்சார்பின்மைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக இந்த கந்தூரி விழா நடத்தப்படுகிறது.
EPFO பயனர்களுக்கு 8.50% வட்டி உயர்வு – PF கணக்கு சரிபார்ப்பு! முழு விவரம் இதோ!
முத்துபேட்டை தாவூத் காம் தர்கா தர்காவின் நடப்பாண்டு கந்தூரி விழா வரும் டிசம்பர் 12 தேதியான ஞாயிற்று கிழமை வருகிறது. மக்கள் அதனை சிறப்பிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் ஞாயிற்று கிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் வழக்கமான விடுமுறையாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாற்று வேலைநாள் பற்றிய அறிவிப்பு வெளியிடவில்லை.