நாளை மறுநாள் (ஏப்ரல் 22) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
அசாம் மாநிலம் கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் வரும் ஏப்ரல் 22ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
பொது விடுமுறை:
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏப்ரல் மாதத்தில் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கவுகாத்தி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 22ம் தேதி தேர்தலும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 24ம் தேதியும் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் அசாம் மாநில அரசு தீவிரம் செலுத்தி வரும் நிலையில், தேர்தலின் போது தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்துவதற்காக பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி மேலும் 3% உயர்வு!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘NI சட்டத்தின் கீழ், கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 22ம் தேதியன்று பொது விடுமுறையை முன்னிட்டு மூடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் GMC தேர்தலில் 7.96 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனுடன், GMC தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தேர்தலையொட்டி ஏப்ரல் 22 அன்று முதன்மை இருக்கைக்கு விடுமுறை அறிவித்து கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 31ம் தேதி நடக்கவிருந்த கவுகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் ராங்ஹோலி பிஹு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 19 முதல் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.