மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி மேலும் 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் தான் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. தற்போது மேலும் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் கூடுதலாக நான்கு சலுகைகள் கிடைத்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது வழக்கம். எப்போதும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயரும் மற்றும் ஜுலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். இந்த கொரோனா கால கட்டத்தில் மட்டுமே அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 3% உயர்த்தப்பட்டு 31%ஆக இருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் எங்கு பணிபுரிகிறார்கள் என்பதை பொருத்தே அகவிலைப்படி தீர்மானிக்கப்படும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்!
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அகவிலைப்படி 3% சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள். அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்குமா என ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் ஊழியர்களின் பயண அலோவன்ஸ் (TA) மற்றும் சிட்டி அலோவன்ஸ் (CA) தொகையும் உயர்த்தப்படும். இதுமட்டுமல்லாமல் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடையும் (Gratuity) தொகையும் உயர்த்தப்படும். மேலும், அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படி மற்றும் பயணப் படியிலும் உயர்வு கிடைக்கும். ஒரே நேரத்தில் பல சலுகைகள் கிடைத்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.