10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 9 வரை பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

0
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மே 9 வரை பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - மே 9 வரை பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 9 வரை பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஒடிசா மாநிலத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பநிலை காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான போர்டு தேர்வுகள் மே 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

தேர்வுகள் ஒத்திவைப்பு

ஒடிசா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று காலை 11 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மாநிலத்தில் தற்போது காணப்பட்டு வரும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு இத்தேர்வுகளை மே 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஒடிசா மாநிலத்தில் தற்போது நிலவும் வெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு தேர்வுகளை மாற்றியமைத்துள்ளது. அதன்படி இன்று காலை 11 மணிக்குத் தொடங்கவிருந்த தேர்வுகள் மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – 3ம் தவணை தடுப்பூசி செலுத்த உத்தரவு!

இப்போது 10ம் வகுப்பு தேர்வுகளை எழுதுவதற்கு மாநிலம் முழுவதும் மொத்தம் 5,71,909 பேர் பதிவு செய்திருந்தனர். மற்றபடி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல 12வது வகுப்புகளுக்கான தேர்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இப்போது 10ம் வகுப்புகளுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையின்படி, சமூக அறிவியல் தாள் மே 2ஆம் தேதி காலை ஷிப்டிலும், ஆங்கிலத் தாள் மே 4ஆம் தேதிக்குப் பதிலாக மே 10ஆம் தேதியும் நடத்தப்படும். அந்த வகையில், வழக்கம் போல காலை 8 மணி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில், உயர்நிலைக் கல்வி கவுன்சில் (CHSE) ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு அல்லது HSC போர்டு தேர்வுகளை இன்று தொடங்கியுள்ளது. இத்தேர்வுகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒரே அமர்வில் மே 31 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிசாவில் இந்த ஆண்டு, 12ம் வகுப்பு தேர்வை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். இப்போது, ஒடிசா அரசு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!