தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – 3ம் தவணை தடுப்பூசி செலுத்த உத்தரவு!
இந்தியாவில் கொரோனா நான்காவது அலை விரைவில் அதிகமாக பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓமைக்ரான் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்த உத்தரவு:
2019ஆம் ஆண்டு முதல் அலையில் தொடங்கிய கொரோனா பல அலைகள் வீசியுள்ளது. 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். உலக மக்கள் இன்னமும் கொரோனாவின் பிடியில் இருந்து மீளாமல் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. இந்தியா முழுவதும் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் முன்களப்பணியாளர்கள் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட், கோவாக்ஸின் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில்,கொரோனா 4வது அலை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து தான் காணப்படுகிறது. ஐஐடி கான்பூர், வரும் ஜூன் 22-ம் தேதி கொரோனாவின் நான்காவது அலை நான்கு மாதங்கள் நீடிக்கும் என்ற கணிப்பைச் சொல்லியிருப்பதும் சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
இது தொடா்பாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், நாமக்கல் மாவட்ட பணிமனைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள், பொதுமக்களுடன் நேரடி தொடா்பில் உள்ளதால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஓட்டுநா், நடத்துநா், பணியாளா்கள், அரசு மருத்துவமனைகளிலோ, அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை செலுத்திவிட்டு, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவா்களும், இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளா்கள் முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தினை தமிழக அரசுக்கு தெரிவிக்க ஏதுவாக அனைத்து பணிமனை கிளை மேலாளர்கள், பிரிவு அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.