தமிழக பள்ளி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தொடர்பான சம்பவங்கள் நடந்து வருவதால் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி மாணவர்களின் நலனிற்க்காக புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பெற்றோர் தரப்பில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முதலில் போராட்டமாக ஆரம்பித்த இந்த விவகாரம் இறுதியில் போராட்டமாக முடிவடைந்தது. மாணவியின் தந்தை ராமலிங்கம் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.
Exams Daily Mobile App Download
வழக்கை விசாரித்த நீதிபதி, 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதனால் தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் மாணவியின் பிரேத பரிசோதனை செய்தது, உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தது, மாணவியின் இறுதி சடங்கு, பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பியது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 01) ஆன்லைன் மாதிரித்தேர்வு
அதன்பிறகு, விரைவில் பள்ளியை திறந்து வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடாது. மாணவர்களுக்கு படிப்பதற்கு ஏற்ற தகுந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.