மாமனார் சட்டையை பிடித்த ஜீவா’ – பரபரப்பான கட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் விறுவிறுப்பாக சென்று வரும் தொடர் ஆகும். இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது. அமைதியாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது புயல் அடித்தது போல் பிரச்சனைகள் கிளம்பி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் மற்றும் சீரியல்களையும் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தனித்துவமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிப்பது விஜய் தொலைக்காட்சி தான். அப்படி விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. அந்த வகையில் எந்தவிதமான அலப்பரையும், ஆரவாரமும் இல்லாமல் கதையின் போக்கில் பயணித்து கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சமீப காலமாக முல்லையின் குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தனத்தின் பிறந்த நாளை குடும்பமே சந்தோஷமாக கொண்டாடி வந்தனர். தனத்தின் பிறந்த நாளிற்கு முல்லை, மீனா குடும்பத்தினர் மற்றும் தனத்தின் அம்மா, அண்ணன் வருகை புரிந்தனர். அப்போது மீனாவின் அப்பா, கதிரை கடுமையாக திட்டினார். இதனால் மீனாவின் குடும்பத்தினருக்கும், முல்லை குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக ஏற்பட்டது. இந்த வாங்குவதில் தனத்தை தரக்குறைவாக முல்லையின் அம்மாவும், மீனாவின் அப்பாவும் பேசினார்கள். அதை கேட்டதும் தாங்கமுடியாத தனத்தின் அம்மா, “தனம் கல்யாணத்திற்காக போட்ட நகை அனைத்தும் இந்த குடும்பத்திற்கே செலவாகி, கொஞ்ச நகை மட்டுமே அவள் கையில் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மீனாவின் மகள் கயலுக்கு போஸ்ட் ஆஃபிஸில் பணம் போட்டு வச்சுருக்காங்க, என் பேரன் பாண்டிக்கு எந்த ஒரு சேமிப்பும் இல்ல, தனம் மற்றவர்களுக்காக அத்தனையையும் செய்து விட்டால், இந்த குடும்பத்திற்காகவே தனம் 15 வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தியாகம் செய்திருக்கிறாள் என வருத்தப்பட்டு பேசினார். அப்போது மீனாவின் அப்பா, ‘இதெல்லாம் சுத்த நடிப்பு’ என சொன்னார். இதைக்கேட்டு தாங்க முடியாமல் ஜீவா மீனாவின் அப்பா சட்டையைப் பிடித்து கோபத்தை காட்டினார். இதை பார்த்து குடும்பமே அதிர்ச்சி அடைந்தது. மேலும் கதிர், எங்களுக்காக வாங்கிய கடனுக்காக தான் இப்படி குடும்பமே சண்டை போட்டுக்கிறிங்க, நானே அந்த கடனை அடைத்துவிடுறேன், எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என சொல்லிவிடுகிறார். இதையடுத்து இந்த பிரச்சனை தாங்காமல் கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியே போகும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.