விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
விஜய் டிவி சீரியல்கள் அனைத்தும் புது கன்டென்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிரபலமான சீரியலில் ஒன்றான “காற்றுக்கென்ன வேலி” சீரியல் நடிகர் நடிகைகள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றனர். அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காற்றுக்கென்ன வேலி:
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் இருந்தாலும் விஜய் டிவி சீரியல்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அனைத்து சீரியல்களும் புதுவிதமான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல சீரியல்கள் அதிகமான TRP பெற்று சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியல் வெற்றிக்கு சூர்யா வெண்ணிலா ஜோடியின் காதல் காட்சிகள் தான் காரணமாக இருக்கிறது.
விஜய் டிவியின் பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாக்கியலட்சுமி’ எழில் – ரசிகர்கள் குஷி!
இந்த சீரியல் தொடக்கத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையால் வீட்டை விட்டு வெளியே வருகிறார். வெண்ணிலா படிக்கும் காலேஜில் தான் சூர்யா பேராசிரியராக இருக்கிறார். முதலில் ஆசிரியரை மாணவி காதலிப்பது என பல சர்ச்சைகள் வந்தது. அதன் பின் வெண்ணிலா படிக்க சூர்யா உதவி செய்ய கதை அப்படியே கொண்டு செல்லப்படுகிறது. தற்போது 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனால் சீரியல் பட குழுவினர் கேக் வெட்டி சீரியல் வெற்றியை கொண்டாடி இருக்கின்றனர். மேலும் சீரியலில் வெண்ணிலாவுக்கு பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் கதைக்களம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த 400 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் சூர்யா, வெண்ணிலாவுடன் சேர்ந்து இந்த சீரியலின் இயக்குனர் , தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் சந்தோசமாக கலந்து கொண்டிருக்கின்றனர்.