வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை, கடனால் உருவான பெரிய பிரச்சனை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல், குடும்பத்தில் கடன் வாங்கியதால் பெரிய பிரச்சனை வருகிறது. ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்ய பிரச்சனை பெரிதாகுகிறது. அதனால் மனம் உடைந்த கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் தனத்தின் பிறந்தநாளுக்காக மீனாவின் குடும்பத்தினரும், முல்லை குடும்பத்தினரும், தனத்தின் குடும்பத்தினரும் வந்திருக்கின்றனர். அப்போது கடன் கொடுத்தவர் வந்து பணம் கேட்க சரவணன் அதை வேறு தேவைக்காக பயன்படுத்தி விட்டார். அதனால் பணம் இல்லாமல் அவர் சத்தம் போட அதனால் ஜீவா மீனாவிடம் இருக்கும் பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறார். அதனால் பெரிய பிரச்சனை வருகிறது.
மீனாவின் அப்பா கதிர் பணம் கொடுக்க வக்கு இல்லை என்றால் ஏன் டிரீட்மென்ட் செய்ய வேண்டும் என கேட்க, அதை கேட்டு கஸ்தூரி முல்லை குடும்பத்திடம் சொல்லிவிடுகிறார். அதனால் முல்லையின் அம்மா மீனா அப்பாவிடம் சண்டைக்கு வருகிறார். குடும்பத்தில் பெரிய பிரச்சனை வருகிறது. அதனால் தனத்தை குறை சொல்ல தனத்தின் அம்மாவும் சண்டை போடுகின்றனர். முல்லை என் மீது தான் தவறு என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. பின் கதிர் எனக்கு கொடுத்த பணத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லியும் யாரும் சண்டையை நிறுத்தவில்லை.
Exams Daily Mobile App Download
அதனால் மனம் உடைந்த கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு போக முடிவு செய்கிறார். மூர்த்தி நீ இப்படி ஒரு முடிவை எடுத்தால் நான் உன்னிடம் பேசமாட்டேன் என சொல்லியும் கேட்காமல் கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். குடும்பத்தில் அனைவரும் தடுத்தும் கதிர் கேட்பதாக இல்லை அதனால் தனம் கதிரை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார். அனைவரும் கதறி அழ முல்லையை அழைத்து கொண்டு கதிர் கிளம்புகிறார்.