தமிழக IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – அரசு உத்தரவு!

0
தமிழக IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - அரசு உத்தரவு
தமிழக IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – அரசு உத்தரவு!

தமிழகத்தில் புத்தாண்டு பரிசாக 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பதவி உயர்வு:

தமிழகத்தில் கடந்த மாதம் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பதவி உயர்வு பட்டியலை இறுதி செய்தனர். அதன் அடிப்படையில் இன்று புத்தாண்டு பரிசாக 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணிமுப்பு அடிப்படையில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து தற்போது ஐஜியாக பணியாற்றி வரும் ஆனந்தகுமார் மற்றும் ஆர் தமிழ் சந்திரன் ஆகியோருக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களை தொடர்ந்து கடந்த 2009 & 2010 ஆம் ஆண்டு கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து தற்போது எஸ்பியாக பணியாற்றி வரும் பி.ஆர் வெண்மதி, பி.அரவிந்த் விக்ரமன், சரோஜ் குமார் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!