அக்னிபாத் திட்டம்: இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு வேலைகள் துவக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தின் மூலமாக இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் ஆட்சேர்ப்பதற்கான வேலைகள் நேற்றில் இருந்து துவங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டம்:
மத்திய அரசு கடந்த ஜூன் 14ஆம் தேதி இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பதற்கான அக்னிபாத் என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. அதாவது, 17.5வயது முதல் 21 வயது வரை கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலும் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் வழியாக இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நேற்றில் இருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலமாக இந்திய ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இந்திய விமானப்படையில் ஜூன் 24 ஆம் தேதியில் இருந்தே ஆட்சேர்ப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இது வரைக்கும் 2.72 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதன்முதலில் இந்த அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததும் இளைஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு விளக்கம்!
ஆனால், தற்போது இளைஞர்கள் பலரும் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், இந்திய கடற்படையில் அக்னிவீரர்களுக்கான ஆட்சேர்ப்பு இன்று முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வாகனங்கள், ரயில்கள் உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள் இந்த அக்னிபாத் திட்டத்தில் சேர முடியாது எனவும் ஆயுதப் படைகள் அறிவித்துள்ளது.