இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களில் இலவச அறிவிப்புக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி!

0
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களில் இலவச அறிவிப்புக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி!
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களில் இலவச அறிவிப்புக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி!
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களில் இலவச அறிவிப்புக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இலவச அறிவிப்புகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இது குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அதிரடி

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடைபெறும் போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சில வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம். மேலும் இப்படி அறிவிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் நாட்டின் நிதி நிலைமையை கருத்தில் கொள்ளாமல் அறிவிக்கப்படுவதால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாக்குறுதிகள் அளித்து அதனை நிறைவேற்றாத பட்சத்தில் மக்களின் கருத்து கேட்புகளுக்கு அரசு ஆளாகும் நிலையும் ஏற்படக்கூடும்.

TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த விவரம் இதோ!

இது குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது இலவச அறிவிப்புகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியல் கட்சிகள் வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை பாதிப்பதால் இலவச அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

மேலும், இது குறித்து இன்றைய அமர்வில் பேசிய தலைமை நீதிபதி, இவ்வழக்கில் கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு விரிவான விசாரணை தேவைப்படுவதாக தெரிவித்தார். இதை தவிர நீதிமன்றம் மூலமாக நிபுணர் குழுவை நியமிப்பதில் உள்ள சாதக – பாதகங்கள் போன்ற பூர்வாங்க விஷயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் ரமணா குறிப்பிட்டுள்ளார். மேலும் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். இதன் பிறகு இந்த வழக்கு விசாரணையை நீதிபதி சந்திரசூட் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!