TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த விவரம் இதோ!
தமிழக சீருடை காவலர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் நாம் தேர்வு முறை, பாடத்திட்டம் குறித்த விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
TNUSRB PC பாடத்திட்டம்:
தமிழகத்தில் மாநகர ஆயுதப்படை பிரிவில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் விண்ணப்பபதிவு கடந்த 15ம் தேதி வரை நடைபெற்றது.
WhatsApp குரூப் சாட்ஸ் -ல் புதிய அம்சம் – விரைவில் அப்டேட்!
இந்த TNUSRB தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும் முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்வர்கள் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம். இந்த தமிழ் பகுதியில் இலக்கணம் , மொழித்திறன், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அடுத்தாக இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் 70 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வானது நேரம் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும்.
Exams Daily Mobile App Download
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்ததாக உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெறுவர். இந்த உடற்தகுதி தேர்வில் அளத்தலில் ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் நடைபெறும். அதே போல பெண்களுக்கு உயரம் மட்டும் அளக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக் கட்ட தேர்வான உடல் திறன் போட்டிக்கு தேர்வாவர்கள் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவைகள் நடத்தப்பட்டு தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்