தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு – அறிவிப்பு வெளியீடு!
ஆசிரியர்களின் சிறப்பான பணியை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
நல்லாசிரியர் விருது
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான ஆசிரியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கபட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இந்தியா முழுவதும் 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 46 ஆசிரியர்களில் இரண்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் தேர்வாகியுள்ளனர். மேலும், தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களில் இலவச அறிவிப்புக்கு தடை- உச்சநீதிமன்றம் அதிரடி!
அதாவது, தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக ஆறு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார். அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கே.ராமச்சந்திரன் என்பவர் மட்டும் இந்த தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=amTkOGyCYAM
மேலும், இந்த தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 46 ஆசிரியர்களுக்கு அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆசிரியர் தினத்தையொட்டி செப்டம்பர் 5 ஆம் தேதி விருது வழங்கவுள்ளார். மேலும், இந்த தேசிய நல்லாசிரியர் விருதினை பெற இருக்கும் 46 ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதலுடன் வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ. 50,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்படும் என மத்திய கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்