கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஹாப்பி நியூஸ் – இலவசமாக பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் தற்போது விறகு அடுப்புக்கு பதிலாக சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் விலையும் அதிகரித்து வருகிறது. அதனால் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் Paytm நிறுவனம் இலவசமாக சிலிண்டர் வழங்க உள்ளது. இதனை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
சமையல் சிலிண்டர்
இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் சமையலுக்கு தேவையான ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகும். மேலும் இதற்கு முன்பாக அனைத்து வீடுகளிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி சமைத்து வந்தனர். இதனால் அதிகளவு காற்று மாசுபாடு ஏற்பட்டது. அத்துடன் சமையல் செய்வதற்கும் நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனை எளிதாக்கும் விதமாக தற்போது அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் எரிவாயு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு சார்பாக மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சவர்மா கடைகளிலும் அதிகாரிகள் சோதனை – 10 கடைகளுக்கு அபராதம்!
அதனால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் அதாவது கடந்த 2020ம் ஆண்டு சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது. இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் தற்போது இதன் விலை அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில் Paytm நிறுவனம் இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டரை வெல்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய வேண்டும்.
Paytm செயலியில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:
1. முதலில் தங்கள் மொபைலில் Paytm செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. இப்போது Paytm செயலியில் உள் நுழைந்து, ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் என்கிற ஆப்ஷனில் புக் கேஸ் சிலிண்டர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
3. அடுத்ததாக இன்டேன், ஹெச்பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் என்ற நிறுவனத்தில் உங்களின் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download
4. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
5. அதன் பின்னர் பேடிஎம் வாலட், பேடிஎம் யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட ஏதேனும் வகையில் பணத்தை செலுத்த வேண்டும்.
6. இப்போது அதேபோல் ப்ரீ கேஸ் என்ற கூப்பன் கோட்டை உள்ளிட வேண்டும்.
7. இதையடுத்து பண பரிவர்த்தனை முடிந்த பிறகு சிலிண்டர் முன்பதிவு உறுதி செய்யப்படும். அதன்பின்னர் சிலிண்டர் ஏஜென்சியில் இருந்து உங்கள் வீட்டுக்கு எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
8. இதில் இலவச சிலிண்டரை பெற கட்டணம் செலுத்தும் முன் ப்ரீ கேஸ் என்ற கூப்பனை நிரப்ப வேண்டும்.
9. மேலும் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதலாவது முன்பதிவு பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது பிளாட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதற்கு புக்கிங் செய்யும் போது பர்ஸ்ட் சிலிண்டர் என்ற புரோமோ கோட்டை டைப் செய்ய வேண்டும்.