Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்!
போஸ்ட் ஆஃபிஸில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சுலபமான முறையில் பேலன்ஸ் பார்ப்பதற்கான வசதியை இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு புதிதாக இரண்டு முக்கியமான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தாரர்கள் இனி மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்பவும், பணம் பெறவும் போன்ற வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப தபால் அலுவலக சேமிப்பு கணக்குதாரர்களுக்கு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் வசதிகளை தபால் துறை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு சேவையும் மின்னணு பணப் பரிவர்த்தனை சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – நடப்பு சீசனின் 3 சிறந்த புதுமுகங்கள்!
இதன் மூலமாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தாரர்கள் மற்ற வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்பவும் மற்றும் பணம் பெறவும் முடியும். இந்த இரண்டு விதமான சேவைகள் மூலம் ஆண்டு முழுவதும் எல்லா நாட்களும் பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும். இந்த இரண்டு சேவைகளுக்கு விடுமுறை நாட்கள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டது. மிக முக்கியமாக, சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான கணக்குகளில் இதன் மூலம் சுலபமாக பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
மேலும், ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. எல்லா விதமான வங்கிகளைப் போலவே இந்த வங்கியிலும் வாடிக்கையாளர்கள் நிறைய சேவைகளைப் பெறுகின்றனர். இந்த வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸ் எவ்வளவு என்று தெரிந்துகொள்வதற்கு 8424046556 இந்த நம்பருக்கு ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்களுடைய மொபைல் நம்பருக்கு பேலன்ஸ் விவரம் வந்துவிடும் என தெரிவித்துள்ளது.