அரசின் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல் – சட்டத்திருத்த மசோதா!
இந்திய நாடாளுமன்றத்தில் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி அன்று குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டத்திருத்த மசோதா அறிமுகம்:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். தற்போது நவம்பர் மாதம் என்பதால் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வருகிற நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வங்கி சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தவுள்ளது.
பள்ளி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
இந்த மசோதா அறிமுகப்படுத்தபட்டு விவாதங்கள் மேற்கொண்ட பிறகு தான் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், “அரசின் தனியார்மய நடவடிக்கை படி இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுவதால் அரசுக்கு ரூ.1.75 லட்சம் கோடி கிடைக்கும்” என்று அறிவித்தார்.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மதுபான விலையில் 10% தள்ளுபடி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதேபோல் இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணைய திருத்த மசோதா ஆகியன அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மேலும் கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா எனும் மசோதாவும் அறிமுகப்படுத்தவுள்ளன. இம்மசோதா அரசே தயார் செய்யும் கிரிப்டோ கரன்சிகளை வெளியிட பயன்படுகிறது. அத்துடன் தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.