2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மதுபான விலையில் 10% தள்ளுபடி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மதுபானத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று அம்மாநில மண்டசூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10% தள்ளுபடி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இந்த கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசியானது 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணைகளாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வெழுத விண்ணப்பிப்போர்க்கு முக்கிய அறிவிப்பு – ஆதார் எண் கட்டாயம்!
இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுவரை 117 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் கிராமப்புற மக்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்னும் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுப்பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டசூர் மாவட்டத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மதுபானங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கியுள்ளது. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு சான்றிதழைக் காண்பித்து இந்த தள்ளுபடியை பெறலாம் என்று மண்டசூர் மாவட்ட கலால் அதிகாரி அணில் சச்சன் தெரிவித்துள்ளார்.