தமிழகத்தில் 6000 காலிப்பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – எங்கு தெரியுமா?
தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு இடத்திலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் பல்வேறு இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் தங்கள் வேலையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வேலை தேடி தங்கள் வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களின் பட்டியல் – ஆட்சியர் விளக்கம்!
இந்நிலையில் கொரோனா தாக்கம் முழுமையாக குறைந்த நேரத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 27.03.2022 அன்று கும்மிடிபூண்டி வட்டம் கவரப்பேட்டை,பெருவாயல்,T.J.S. பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் வேலைவாய்ப்புகளை பெறலாம்.
இதில் 100 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 6000 காலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 40 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி./ +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி. இ. / எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது- மேலும் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி தொடர்பான சேவைகள் முகாமில் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-27660250, 8637639822 மற்றும் 9952493516 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.