தமிழகம் முழுவதும் ஒரு வாரம் பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு!
தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை 25 சதவீதம் குறைத்துள்ளனர். குறைவான கட்டணத்தை வைத்து கொண்டு பள்ளியை நடத்த முடியாது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் ஒரு வாரம் மூடல்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அனைத்து வகையான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளன. இதனிடையே 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடியாக வகுப்புகள் என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் 75% கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் 2 முதல் 3 மணிநேரம் திடீர் மின்தடை – தூக்கமின்றி தவித்த மக்கள்! காரணம் என்ன?
ஆனால் தற்போது நேரடி வகுப்புகள் என்பதால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் பெறப்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டணங்களை தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. இந்நிலையில் LKG மற்றும் UKG மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டணமாக கட்டண நிர்ணய குழு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
இதே போல 12ம் வகுப்புகளுக்கு கல்வி கட்டணமாக 10 ஆயிரம் வாங்க சொல்கின்றனர். எப்படி பாடம் நடத்தி பள்ளிகூடத்தையும் இயக்க முடியும் என்று தனியார் பள்ளி சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தனியார் பள்ளிகள் 28 வகை வரி கட்டுவதை யாரும் கணக்கில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே அதிக கட்டணங்களை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி நந்தகுமார், கட்டண நிர்ணயக்குழு செயல்பாடு கண்டித்து ஒரு மாதம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் மற்றும் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்கும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.