தமிழகத்தில் ஜூன் 25ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – அமைச்சர் தகவல்!
பெரம்பலூரில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 25ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் மூலமாக தங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 25ம் தேதி அன்று பெரம்பலூரில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! வலுக்கும் போராட்டம்!
மேலும் இம்முகாம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பதாவது, இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். அத்துடன் இதில் அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் வழி வகை செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் , கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான வேலைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.