இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! வலுக்கும் போராட்டம்!

0
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு - 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! வலுக்கும் போராட்டம்!
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு - 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! வலுக்கும் போராட்டம்!
இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – 500க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து! வலுக்கும் போராட்டம்!

இந்தியாவில் ராணுவத்தில் அதிகளவு இளைஞர்கள் சேர வேண்டும் என்று மத்திய அரசு அக்னிபாத் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு 75% ராணுவ வீரர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதனால் இத்திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பின. அதன் எதிரொலியாக தற்போது 500 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டம்:

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்கள் என்ற ‘அக்னிபத்’ புதிய வேலைவாய்ப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். 4 ஆண்டுகளுக்குப்பின், இவர்களில் 25% பேர் முப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அத்துடன் 75% பேர் பணியில் இருந்து விலக்கி கொள்ளப்படுவார்கள். இவ்வாறு 4 வருடங்களுக்கு பிறகு வெளியேற்றப்படுவதால் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று.

TN Job “FB  Group” Join Now

அதனால் இத்திட்டத்துக்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதில் குறிப்பாக பீஹார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அத்துடன் உத்தரப்பிரதேசத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கானா, ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் ஏதும் ஏற்படாதவாறு இருக்க போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைநகர் டெல்லியிலும் வன்முறை நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Post Officeல் தங்க பத்திர சேமிப்பு திட்டம் – ஜூன் 20 முதல் சிறப்பு முகாம் துவக்கம்!

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் பாரத் பந்த் எனப்படும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக 500 ரயில்களை மத்திய ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் ரயில்வே துறைக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவில் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!