தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 1) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மைய இயக்குனர் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழி காட்டும் மையம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். இடையில் கொரோனா தாக்கத்தால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பற்றோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர்.
ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல் – கொரோனாவை தடுக்க அதிரடி உத்தரவு!
இதன் மூலம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர். வாரம் அல்லது மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி காட்டும் மையம் சார்பாக நாளை (ஏப்ரல் 1) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தொழில் நெறி காட்டும் மையத்தில் காலை 10.30 மணிக்கு முகாம் தொடங்கவுள்ளது.
இந்த முகாமில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் தங்களின் கல்வி சான்றிதழ், சுய விவரக் குறிப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ ஆகிய கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்று பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.