ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல் – கொரோனாவை தடுக்க அதிரடி உத்தரவு!

0
ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல் - கொரோனாவை தடுக்க அதிரடி உத்தரவு!
ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல் - கொரோனாவை தடுக்க அதிரடி உத்தரவு!
ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல் – கொரோனாவை தடுக்க அதிரடி உத்தரவு!

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கை பல மடங்காக பெருகிக்கொண்டே செல்வதால் சீனாவில் உள்ள ஹாங்காய் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொது முடக்கம்:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இந்த தொற்றிற்கு பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசும் இந்த கொரோனவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் தடுத்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரும்படி எச்சரித்துள்ளனர். மேலும், பொது இடங்களுக்கு வரும் போது மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பிற்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு..!

இந்த கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தகைய கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்தது. கொரோனா மூன்றாம் அலை ஒரு வழியாக முடிந்துவிட்டது என பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது சீனாவில் பழையபடி கொரோனா பாதிப்பு தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. சீனாவில் உள்ள ஹாங்காய் நகரில் 1.6 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தான் கொரோனா அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. சீனாவில் இந்த மாதத்தில் மட்டுமே 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அனைவரும் வருக!

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த சீனாவில் இரு கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமையில் இருந்து ஹாங்காயின் புடோங் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாங்காய் நகரின் மேற்கு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு பொது முடக்கம் அமல்படுத்தபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் செயல்படாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!