திருவள்ளூரில் நாளை (ஜூன் 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை!
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதம் 2 முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதன்படி நாளை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணிகள் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த முகாம் மாதந்தோறும் 2வது வெள்ளிக்கிழமை மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். அத்துடன் பட்டயப் படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும், இதில் கலந்து கொள்பவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அத்துடன் இம்முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை பெற்று கொள்ளலாம் என்று திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.