தமிழகம் முழுவதும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்காக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி இருக்கிறார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து வரும் ஜூன் 13ம் தேதியன்று 1 முதல் 12 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் புதிய கல்வியாண்டு துவங்க இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வாரம் முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஏதுவாக, தேவையான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில், ‘தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் முழு வீச்சில் செயல்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது பள்ளிகள் நீண்ட நாட்கள் கழித்து திறக்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை நாம் சரியான முறையில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளி பிரச்சாரத்தைத் தொடங்கி, அவற்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருவாரம் தூய்மைப் பிரச்சாரத்தை சிஇஓக்கள், டிஇஓக்கள் மற்றும் கல்வித் துறையின் மற்ற அதிகாரிகள் இணைந்து நடத்தலாம். இப்போது வகுப்பறைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதுடன் அனைத்து வகுப்பறைகளையும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். மரச்சாமான்கள் முடிந்தவரை வார்னிஷ் கொண்டு வர்ணம் பூச வேண்டும். கழிப்பறைகள் பழுதுபார்க்கப்பட்டு, கதவுகள் சரியாக அமைக்கப்பட வேண்டும். மேலும், தண்ணீர் கொள்கலன்கள் மற்றும் தொட்டிகள் ஆகியவை குளோரினேஷன் செய்யப்பட்டு புதிதாக வைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் இருக்கும் மதிய உணவு மையத்திற்கு வெள்ளையடித்து, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை பொதுமக்களின் பங்களிப்பு மூலம் மாற்றலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.