தமிழகத்தில் ஜூலை 2ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 2ம் தேதியன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த முகாமில் படித்த பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் எதிர்காலத்தை பிரகாசமாகும் முயற்சியில் அரசு சில வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் பல்வேறு தனியார் துறைகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஆட்சேர்ப்புகளை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை மாதம் 2ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வரும் ஜூலை 2ம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அம்மாவட்ட ஆட்சியர் வினித் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பில், ‘திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வரும் ஜூலை 2ம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்சேர்ப்பு செய்ய இருக்கின்றது.
தமிழகத்தில் தொடர்ந்து தள்ளிப்போகும் LKG, UKG வகுப்புகள் – பெற்றோர்கள் ஏமாற்றம்!
அதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள், பொறியியல், கலை அல்லது அறிவியல் பட்டதாரிகள் கணினி பயின்றவர்கள், ஓட்டுநர்கள், தையல் உள்ளிட்ட தொழிற்கல்வி அறிந்தவர்கள் என அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முதலில் அதற்கான இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் தகவல்களை 0421-299152 அல்லது 94990-55944 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தெரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.