மதுரையில் நாளை (மே 6) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!

0
மதுரையில் நாளை (மே 6) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!
மதுரையில் நாளை (மே 6) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!
மதுரையில் நாளை (மே 6) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை!

மதுரையில் நாளை தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் மூலமாக தங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை அரசு ஏற்படுத்தி அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் நாளை மதுரையில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப நீதிமன்றங்களுக்கு மே 14 வரை கோடை விடுமுறை – சென்னை ஐகோர்ட் உத்தரவு!

இந்த முகாம் மதுரை மாவட்டத்தில் கோ.புதூரில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம். அத்துடன் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். அதனால் வேலை இழந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களின் படிப்புக்கேற்ற வேலைகளை பெற்று கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

இம்முகாமில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் தங்களின் சுயவிவரக்குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றுடன் மற்றும் கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களுடன் வருகை புரிய வேண்டும். அத்துடன் இதில் பணி ஆணைகளை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ஆ.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!