குடும்ப நீதிமன்றங்களுக்கு மே 14 வரை கோடை விடுமுறை – சென்னை ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றங்கள் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் செயல்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இந்தாண்டு கோவை மாவட்டத்தில் செயல்படும் இரண்டு குடும்ப கோர்ட்டுகளுக்கு, வரும் மே 14 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கோடை விடுமுறை:
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில், பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது. காலை முதலே பல ஊர்களிலும் வெயில் சுட்டெரித்ததோடு அனல் காற்றும் வீசுகிறது. மாலை நேரங்களில் அனலோடு புழுக்கமாகவும் இருந்ததால் மக்கள் வியர்வையில் குளித்தனர். சுமார் 9 மாவட்டங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 105.4 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கிடையில், அக்னி நட்சத்திரம் என கூறப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கி உள்ளது.
Exams Daily Mobile App Download
இது 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ள நிலையில், 24 ஆம் தேதி வரை அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இயல்பான அளவை விட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும் எனவும் வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது, தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரத் தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
CSK ரசிகர்கள் கவனத்திற்கு – ரவீந்திர ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து மனம் திறந்த ஸ்டீபன் பிளெமிங்!
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் போது கோர்ட்டுகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் மே 31-ந் தேதி வரை கோர்ட்டுகளுக்கு கோடைகால விடுமுறை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவையில் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், அனைத்து சிறப்பு கோர்ட்டுகள், விரைவு கோர்ட்டுகள் தவிர மற்ற நீதிமன்றங்களுக்கு வரும் 31 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து குடும்ப நீதிமன்றங்களுக்கு, இந்தாண்டு, இம்மாதத்தில் முதல் இரண்டு வாரம் விடுமுறை அளித்து, சென்னை ஐகோர்ட் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, கோவையிலுள்ள முதன்மை மற்றும் கூடுதல் குடும்ப நீதிமன்றம், மே 14 வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 16 முதல் வழக்கம் போல விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.