தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 9.1% வரை சம்பள உயர்வு!
நாடு முழுவதும் உள்ள மக்கள் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டும் வரும் நிலையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பணி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெலாய்ட் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சம்பள உயர்வு:
இந்தியாவில் கடந்த வருடங்களில் தீவிரமெடுத்து பரவிய கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல தொழில்கள் முடங்கியது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து தவிர்த்து வந்தனர். இதனால் மாத ஊதியமின்றி பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். இந்த நேரத்தில் அரசு நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனையடுத்து அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்குகளை ரத்து செய்து மீண்டும் தொழில்கள் இயங்க அனுமதி அளித்தது.
சென்னையில் நாளை (மார்ச் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது. மேலும் மாநில அரசுக்கும் சம்பள உயர்வும் அகவிலைப்படி உயர்வு போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனங்களும் சம்பள உயர்வு, பணி உயர்வு, ஊக்கச் சலுகை போன்றவைகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இது குறித்து டெலாய்ட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2022ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு 9.1 சதவீத சம்பள உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
இது கடந்த வருடத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடத்தப்பட்ட ஆய்வின் படி சுமார் 34 சதவீத நிறுவனங்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவித்துள்ளன. வாழ்க்கை அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தான் அதிக ஊதிய உயர்வு இருக்கும் என்று தகவல்கள் கூறுகிறது. இதனால் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டும் வரும் நிலையில் இந்த ஊதிய உயர்வு அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.