தொழில்நுட்ப உதவியுடன் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாகும் இந்தியா – பிரதமர் மோடி நம்பிக்கை!

0
தொழில்நுட்ப உதவியுடன் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாகும் இந்தியா - பிரதமர் மோடி நம்பிக்கை!
தொழில்நுட்ப உதவியுடன் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாகும் இந்தியா - பிரதமர் மோடி நம்பிக்கை!
தொழில்நுட்ப உதவியுடன் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாகும் இந்தியா – பிரதமர் மோடி நம்பிக்கை!

இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்ற தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அறிவிப்பு

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜிட்டல் இந்தியா மூலமாக தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொழில்நுட்பம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தொழில் விதிமுறைகளை கடைபிடிக்க சொல்லி சிறு நிறுவனங்களின் செலவினங்களை குறைக்க அரசு விரும்புவதாக தெரிவித்தார்.

RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க தவற விடாதீர்கள்…!

பின் பேசிய அவர் இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்ற தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் புரட்சி சென்று அடைகிறதா என்பதை உறுதி செய்ய டிஜிட்டல் உள்கட்டமைப்பை நவீனமான முறையிலும், பரந்த வகையிலும் உருவாக்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகியவை மூலம், மருத்துவம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் பெரிய மாற்றங்கள் வர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!