என்னது…பழைய பென்ஷன் திட்டத்திற்காக அனுப்பப்பட்ட சர்க்குலர் இதுக்கு இல்லையா? எதுக்கு தெரியுமா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பழைய பென்ஷன் திட்டத்தில் சேர விரும்புவர்களின் பட்டியலை தயாரித்து கொடுக்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தற்போது இந்த சுற்றறிக்கை இதற்காக அனுப்பப்படவில்லை. இதனை நிதித்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளது என தெரியவந்துள்ளது. இப்போது இந்த சுற்றறிக்கை உண்மையில் எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து பார்ப்போம்.
பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு துறைகளில் பழைய ஓய்வூதிய திட்டம் பெற விரும்புபவர்களின் பட்டியலை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என ஒரு சுற்றறிக்கை நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
தொழில்நுட்ப உதவியுடன் 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாகும் இந்தியா – பிரதமர் மோடி நம்பிக்கை!
இதனால் அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கப் போகிறது என குஷியில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த சுற்றறிக்கை இந்த காரணத்திற்காக அனுப்பப்படவில்லை, நிதித்துறை இதனை தவறாக புரிந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த சுற்றறிக்கையானது எதற்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும் போது தற்காலிகமாக பணியில் சேர்ந்த ஊழியர்கள், அதன் பின்பு நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் தங்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகி உள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளும், இவர்களுக்கு பழைய திட்டம் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனால் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்த சமயத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த ஊழியர்களின் விவரங்களை சேகரித்து தருமாறு நிதித்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை தான் நிதித்துறை தவறாக புரிந்து கொண்டுள்ளது.