LPG பயனர்கள் கவனத்திற்கு – விலை உயர்வு & மானியம் ரத்து! அரசு அறிவிப்பு!
கொரோனா பேரலைத்தொற்று காரணமாக நிலவும் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எல்பிஜி விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மையம் தெரிவித்துள்ளது.
எல்பிஜி விலை உயர்வு
இந்தியாவில் கொரோனா பேரலைத்தொற்று பாதிப்புகள் மற்றும் உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உச்சம் தொட்டுள்ளது. அந்த வகையில் இப்போது கொரோனா பேரலைத்தொற்று காரணமாக நிலவும் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எல்பிஜி விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனுடன் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு எல்பிஜிக்கான மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – IVR சேவை அறிமுகம்!
இது குறித்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர்.அனிலுக்கு அனுப்பிய கடிதத்தில், எல்பிஜியின் சர்வதேச விலையின் அடிப்படையில் மானியத் தொகை ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 2020 மே வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எல்பிஜி விலையில் 50 சதவீத மானியத்தை மையம் வழங்கியது. ஆனால், எல்பிஜியின் உள்நாட்டு விலை உயர்ந்ததால் இப்போது மானிய விநியோகம் ரத்து செய்யப்பட்டதாக மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில், வீட்டு உபயோகத்திற்காக 55 சதவீத எல்பிஜியை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில் சவூதி ஒப்பந்த விலையின் அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, முன்னதாக ஏப்ரல் 2020 முதல் நவம்பர் 2021 வரை, சவுதி CP விலை ஏறக்குறைய 258 சதவீதம் உயர்ந்துள்ளது என்று மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது, சமையல் எரிவாயு மீதான தொடர்ச்சியான விலை உயர்வால், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.