Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – IVR சேவை அறிமுகம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இந்த சேமிப்பு திட்டங்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக சேமிப்புதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தற்போது அஞ்சல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதற்கென IVR சேவையை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.
IVR சேவை
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சிறு சேமிப்பு திட்டங்கள் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இத்திட்டம் வங்கிகளை காட்டிலும் 2 மடங்கு லாபத்தை தருகிறது. அத்துடன் குறைந்த நாட்களில் அதிகமான சேமிப்பு தொகையை பெற முடிகிறது. மேலும், இந்திய அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதால் இதில் முதலீடு செய்யக்கூடிய 100% பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருமானமும் கிடைக்கிறது. அதனால் மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் பெருமளவு இணைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – முழு விபரம் இதோ!
தற்போது இத்திட்டங்களில் சேமிப்புத்தார்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று தான் பதில் காண வேண்டியிருந்தது. இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சேமிப்புதாரரின் நலன் கருதி சந்தேகங்களை வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலமாக கேட்டறிய ஏதுவாக IVR சேவையை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தங்களுக்கு எழும் சந்தேகங்களை 18002666868 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த IVR சேவையை அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு சேமிப்புத்தார்கள் சேமிப்பு திட்டம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டறிந்து தெரிந்து கொள்ளவும், சேமிப்பு கணக்கு தொடர்பான ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப், என்எஸ்சி ஆகியவற்றில் பெறப்பட்ட வட்டி தொகை குறித்த அனைத்து சந்தேகங்களுக்கான பதிலையும் இந்த சேவை மூலம் பெற முடியும்.