ஜூலை 18ம் தேதியன்று இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் – ஆணையர் அறிவிப்பு!
வரும் ஜூலை 18ம் தேதியன்று இந்திய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 15ல் வேட்புமனு தாக்கல் துவங்குவதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பு:
இந்திய ஜனாதிபதி என்று அழைக்கப்படும் குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைவர் ஆவார். அதன்படி தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்து வரும் ராம் நாத் கோவிந்த் மத்திய நிர்வாகக் குழுவின் தலைவராகவும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவராகவும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ராம் நாத் கோவிந்த்தின் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வர இருப்பதாகவும், இந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத்துறை ஆலோசனை!
அதாவது, கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ராம் நாத் கோவிந்த்திற்கு பதிலாக புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு பதிலாக புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மாநிலங்களவை தலைமைச் செயலாளர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார். இத்தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 776 எம்பிக்கள், 4,033 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 4,809 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதில் 776 எம்பிக்களின் ஓட்டு மதிப்பு 5,43,700 மற்றும் மொத்த எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு 5,43,231 ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் இத்தேர்தலுக்கான ஒட்டுமொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். இப்போது ஜூன் 15ம் தேதியன்று துவங்கும் வேட்பு மனுத்தாக்கலின் போது வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். இந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 29 ஆகும். மேலும், வேட்பு மனுக்களை ஜூலை 2 வரை திரும்ப பெறலாம். இந்த தேர்தலுக்கான வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை 25ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பார்’ என்று கூறியுள்ளார்.