தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத்துறை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பு பணியாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கடைசியாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவத் தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்புப் பணிகளை மேற்கொண்டது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இரவு நேர மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்பும் குறைந்தது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
திருப்பூரில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,021 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தான் தற்போது பாதிப்புகளை அதிகப்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது நான்காம் அலையின் தொடக்கமாக இருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம், அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.