கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நாளை மே 21 அன்று மின்மாற்றி அமைக்கும் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடையாகும் என அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மின்தடை:
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதற்காக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடைபடாமல் சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பல மணி நேரம் காத்திருப்பு!
அது போலவே துணை மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரத்தை எவ்வித சேதமின்றி சப்ளை செய்ய டிரான்ஸ்பார்மர் பயன்படுகிறது. அவ்விதமாக தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நாளை (மே 21) சனிக்கிழமை அன்று புது டிரான்ஸ்பார்மர் ஒன்று வைக்கப்படவுள்ளது. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது நாளைய தினம் நாகர்கோவில் பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சண்முகம் தெரு, தாயகம் தெரு, வெள்ளாளர் காலனி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.