திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பல மணி நேரம் காத்திருப்பு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - பல மணி நேரம் காத்திருப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - பல மணி நேரம் காத்திருப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பல மணி நேரம் காத்திருப்பு!

கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் வசதிக்காக மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு தரிசனத்தில் எந்த ஒரு இடையூறு ஏற்படாமல் இருக்க விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி தரிசனம்:

கொரோனா தொற்று பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ளதால், திருப்பதி ஏழுமலையான தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வசதியை முன்னிட்டு 300 ரூபாய் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது நாள்தோறும் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கட்டண தரிசனத்திலும் இலவச தரிசன வரிசையிலும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு மையம் மாற்றம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தற்போது கோடைகாலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் வைகுண்ட காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ள க்யூ வரிசையில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். தினமும் குறைந்தது 8 மணி நேரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி, திருப்பதியில் நேற்று 74,389 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 38,007 பேர் முடி காணிக்கை செலுத்தினர். இதை அடுத்து ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. கூட்ட நெரிசல் காரணமாக வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 23 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை வாங்க குவிந்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பதியில் பரவலாக மழை பெய்து வருவதால், கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!