தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 10 மணி வரை மின்விநியோகம் தடை படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் நடைபெறுவதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 10 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணிக்கு திரும்பும் தீபக் சாஹர்?
வேலூர் மாவட்டத்தில் 2022-23 யில் அம்மாவட்ட மக்கள் தடையின்றி மின்சாரம் பெற வேண்டும் என்பதற்காக, அத்தியாவசிய மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் தற்போது வேலூரில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், ஹரிஓம் நகர், ஒயாசிஸ் ஸ்கூல் தெரு, திரு. வி.க தெரு, இளங்கோவடிகள் சேவியர் நகர், வள்ளலார் பேருந்து நிறுத்தம் பகுதி, சௌத் அவென்யூ சாலை, பகுதி 1, தஞ்சியம்மாள் மண்டபம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 4 மின்தடை ஏற்பட உள்ளது. அடுத்தாக, ஏப்ரல் 5 ஆம் தேதி பிஎஸ்என்எல் சாலை, தஞ்சியம்மாள் மண்டபம் முதல் பி எஸ் என் எல் ரோடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின்வாரியம் தெரிவித்து உள்ளது.
அதனை தொடர்ந்து, தொரப்பாடி துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான அன்னை தெரசா நகர், சித்தேரி சாலை, பாலிடெக்னிக், கலைவாணர் நகர், ஆர். வி நகர், ஈஸ்வரி நகர், கணபதி நகர் வரை உள்ள பகுதிகளில் ஏப்ரல் 4 ஆம் தேதி மட்டும் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாக, ஜெயராம் நகர், பெரியார் நகர் 1, 2, 3வது தெரு, அரசு பொறியியல் கல்லூரி வரை உள்ள இடங்களில் ஏப்ரல் 5 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.