IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அணிக்கு திரும்பும் தீபக் சாஹர்?
இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு முன்னாக காயத்தால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது தொடர்பான சில தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.
தீபக் சாஹர்
கடந்த மாதத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி 20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு தொடை தசை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் கலந்து கொள்வதில் சிக்கல்கள் இருந்தது. இருப்பினும் IPL 2022க்கான மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரை அதிகபட்சமாக ரூ.14 கோடி கொடுத்து எடுத்தது. இப்போது காயத்தால் அவதிப்பட்டு வரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த சீசனின் பெரும் பகுதியை இழக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
இப்படி இருக்க தற்போது 29 வயதான தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவது தொடர்பான சில நல்ல செய்திகளை ரசிகர்களுக்கு வழங்கி இருக்கிறார். அதாவது, சாஹர் தேசிய கிரிக்கெட் அகாடமி வலைகளில் பந்துவீசுவது போன்ற ஒரு படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு, சிஎஸ்கே அணியில் அவர் சீக்கிரம் இணைவார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. சமீப காலமாக சிஎஸ்கே பந்துவீச்சு வரிசையில் தீபக் சாஹர் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
மேலும் பவர்பிளே ஓவர்களில் அவரது செயல்திறன் CSK அணிக்கு பெரும் சொத்தாக மாறி இருக்கிறது. இப்போது தீபக் சாஹர் அணிக்கு மீண்டும் திரும்பினால் கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியுற்ற CSK அணி வெற்றிப்பாதைக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடமும், 2ம் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடமும் தோல்வியடைந்தது. இப்போது அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.