தமிழகத்தில் ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை (ஜூலை 23) அன்று சிவகங்கை, திருச்சி பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்களின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தின் கடந்த 9 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் பல இடங்களில் மின் விநியோகம் தடை ஏற்பட்டது. இது குறித்து ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பிரிவு அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி வாரியாக பராமரிப்பு பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசு ‘இந்த’ வசதிகள் இன்றி பேருந்துகள் வாங்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு!
அதன்படி சிவகங்கை மாவட்டம் அரசனூர் பகுதிகளில் நாளை (ஜூலை 23) துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அரசனூர், இலுப்பக்குடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூர், படமாத்தூர், சித்தலூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரிம் மைக்கேல்பட்டினம், களத்தூர், ஏனாதி, கல்லூரணி, கோவானூர், ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல திருச்சியில் கம்பரசம் பேட்டை துணை மின்நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணியால் புகர் பகுதிகளான கரூர் புறவழிச்சாலை, கரூர் சாலை, வி.என் நகர், மாதுளக்கொல்லை, எஸ்எஸ் கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரி தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித வளனார் கல்லுரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இதே போல வாணப்பட்டறை, என்எஸ் சாலை, சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, மாரிஸ் திரையரங்கம், தனிஷ்க், ஜி ஆர் டி கோட்டை காவல்நிலைய சாலை, வாத்துக்காரத் தெரு, உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக் கொல்லைத் தெரு, குறத்தெரு, புத்தூர், அக்ரஹாரம், செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, டிடி சாலை, பிவிஎஸ் கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ் எஸ்டேட், சந்தோஷ் கார்ட்டன், மருதாண்ட குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான் நகர், சீரத் தோப்பு, எகிரிமங்கலம், சோழராஜபுரம், காவேரி நகர்.
TN Job “FB Group” Join Now
முருங்கைபேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச்சாலை, புதுத்தெரு, பொன்மலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் ஹெச்ஏபிபி, டிஎன்பிஎல், முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், அறியாமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லகுடி, ஓட்டக்குடி, வேங்க்கூர், அரசன்குடி, நடராஜபுரம், தோகூர், உள்பட சுற்றுப்பகுதிகளில் மின்சாரம் இருக்காது என திருச்சி நகர மின்வாரிய செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 1912, 18004252912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.