தமிழக அரசு ‘இந்த’ வசதிகள் இன்றி பேருந்துகள் வாங்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் உடைய பேருந்துகளை வாங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 25% பேருந்துகள் மாற்றுத்திறனாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேருந்து வசதிகள்:
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனக்கான அடையாளத்தை பெறும் நோக்கில் வேலைவாய்ப்பு, கல்வியிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை – அரசுக்கு கோரிக்கை!
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்யும் வகையில் தமிழகத்தில் பேருந்துகள் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஜெர்மனி நாட்டு நிதியுதவியுடன் புதிதாக 4,000 பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளோம் என தமிழக அரசு பதிலளித்தது. அதில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும், 25% பேருந்துகள் சக்கர நாற்காலி உதவியுடனும் ஏறும் வசதியுடன் இருக்கும் எனவும் தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகளை வாங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் எளிதாக பயணம் செய்ய முடியும். பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .