தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – நடவடிக்கை எடுக்க உத்தரவு!

0
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை - நடவடிக்கை எடுக்க உத்தரவு!
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை - நடவடிக்கை எடுக்க உத்தரவு!
தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – நடவடிக்கை எடுக்க உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் அதிகமான விலையில் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட டாஸ்மாக் கடை மேலாளர்களுக்கும், நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் விற்பனை

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டும் முக்கிய துறைகளில் ஒன்றான டாஸ்மாக் மதுக்கடைகள் ஊரடங்கு தளர்வில் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுபானங்கள் விலை நிர்ணயித்ததை விட அதிகளவு இருப்பதாக புகார்கள் எழுந்து வந்ததையடுத்து, இப்படிப்பட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 22ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இக்கூட்டத்தில், மதுக்கடைகளில் 90 நாட்களுக்கு அதிகமான மதுபானங்களையும், குறிப்பிட்ட அளவு மது வகைகளை மட்டும் விற்பனை செய்யக் கூடாது எனவும், அனைத்து வகையான மது வகைகளையும் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்த புகார்கள் அடிக்கடி பெறப்படுகிறது. இவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபடும் கடைகள் மீது மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடையின் செயல்பாடுகளை புகைப்படம் எடுத்து அவற்றை, தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் கடைகளுக்கு உரிய நேரத்திற்கு வராத மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளில் ஏற்படும் சிக்கல்களையும், தொழிற்சங்கங்க பணியாளர்களின் நலன் குறித்து கேட்டு, விசாரித்து குறைகள் இருப்பின் அவற்றை மாவட்ட மேலாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை மாவட்ட மேலாளர்களால் சரிபடுத்த முடியாத பிரச்சனைகள் இருந்தால் அவற்றை முதுநிலை மண்டல மேலாளர்களிடமும், அதற்கு மேல் உள்ள சிக்கல்களை மேலாண்மை இயக்குநரிடம் தெரிவித்தால் போதுமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!