விருதுநகரில் நாளை (ஏப்ரல் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 13) துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.
மேலும் அதனை தொடர்ந்து, மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக சாலைகளிலும் ஒரு சில இடங்களில் எக்கச்சக்கமாக விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது.
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் மின் கம்பம் பழுது அடைந்து உள்ளது. ஆதலால் இந்த மின்கம்பம் மாற்றும் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 13) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், ராஜா பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேலும் இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.