தமிழகத்தில் செவ்வாய் கிழமை (மார்ச் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் பூலாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் இணைப்பில் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டுவிடுவதால் பல்வேறு பகுதிகளில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இதன் காரணமாக பல பகுதிகளில் எதிர்பாராத விதமாக பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து வருகிறது .அதிலும் இரவு நேரங்களில் தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது ..இதனை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15!
காலை 9 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் சாதனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி மின் துண்டிப்பு செய்யப்படுவதில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் வேறு வேறு தினங்களில் மின் துண்டிப்பு செய்யப்படுகிறது. தற்போது பூலாம்பட்டி பகுதிகளில் உள்ள துணை நிலையங்களில் பராமரிப்பு பணி செய்யவுள்ளதால் நாளை பூலாம்பட்டி பகுதிக்கு மின்தடை அறிவித்துள்ளனர்.
PF அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மாற்றம் செய்வது எப்படி?
மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்: மேட்டூர் மின் பகிர்மான வட்டம், எடப்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், நாளை (செவ்வாய்) காலை 9 மணி முதல் நண்பகல் வரை பூலாம்பட்டி பில்லக்குறிச்சி, கடக்கல், வன்னிய நகர், வளையசோழர் கள்ளுக்கடை சித்தூர், வெள்ளரி வெள்ளி நெடுங்குளம், கோனேரிப்பட்டி, சல்பைங்கம் பூமணியர், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை எடப்பாடி கோட்ட சொற்பொறிவாளர் தமிழ்மணி அறிவித்துள்ளார்.