திருச்சியில் ஜூலை 27 மின்தடை ஏற்படும் பகுதிகள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
ஜூலை 27ம் தேதியான நாளை மின்வாரியத்தின் அவசர பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் துணை மின் நிலையம் மற்றும் K.சாத்தனூர் துணை மின் நிலையத்தின் பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
திருச்சி மாவட்டத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 27) மின்தடை செய்யப்பட இருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் கம்ப தாங்கு கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை – உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்!
இதனால், திருவெறும்பூர் துணை மின் நிலையம் மற்றும் K.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 முதல் மாலை 4.00மணி வரை மின்தடை செய்யப்படும். திருவெறும்பூர் மலை கோவில், பிரகாஷ் நகர், வேங்கூர், டி நகர், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர் , திருவெறும்பூர் தொழில் பேட்டை ,மேல குமரேசபுரம், சோழமாதேவி, சோழ மாநகர் நகர்,புது தெரு, நவல்பட்டு பர்மா காலனி ,நேரு நகர், அண்ணா நகர் போலீஸ் காலனி ,பூலாங்குடி, பாரதி நகர், 100 அடி ரோடு ,சூரியூர் கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்.ஐ.டி, குண்டூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும், K.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளான, K.K நகர் , இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர்,L.I.C காலனி, பழனி நகர், முல்லை நகர், R.V.S நகர், ஒயர்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், J.K. நகர், சந்தோஷ் நகர் ,ஆனந்த் நகர், கே சாத்தனூர் ஓலையூர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜா நகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.