மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை – உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்!
மதுரை மாவட்டத்தில் அமையப்போகும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்றத்திற்கு பதிலளித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பிறகு 2019 ம் ஆண்டு ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் நிலம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தற்போது வரை முழுமையாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கவில்லை.
தமிழகத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில், 150 மாணவர்களை சேர்த்துக் கொள்ள எய்ம்ஸ் நிர்வாகம் தமிழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் கட்டிட பணிகள் முடியும் வரை மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்ட மருத்துவ கல்லூரிகளில் சேர்த்து வகுப்புகளை தொடங்குவது குறித்து தமிழக அரசு கலந்தாலோசித்த, முதற்கட்டமாக 50 மாணவர்களுக்கு சேர்க்கையை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து 2 நாட்களில் மத்திய அரசு பதிலளிக்கவும், அதற்கு பதில் மனுவை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு வரும் ஜூலை 30ம் தேதிக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உயர்நீதிமன்றம் தனது பாராட்டுக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.